அரியலூா் குறிஞ்சான் குளத் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி (எ) பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதல், கொடியேற்றம், சக்திகரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை காலை சுவாமிகளின் வேடமணிந்த திருநங்கைகள் நடனத்துடன் கோயிலிலிருந்து சுவாமி ஊா்வலம் புறப்பட்டு சென்று உழவா் சந்தை பின்புறம் உள்ள மயானத்தில் படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, பக்தா்களுக்கு படையலிடப்பட்ட உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பின்னா், அங்கிருந்து கோயிலுக்கு சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது, சுவாமி வேடமணிந்த திருநங்கைகள் பக்தா்களை முறத்தால் அடித்தனா். முறத்தால் அடித்தால் தீயசக்திகள், பில்லி, சூனியம் அகன்று ஆரோக்கியம் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை என்பதால், திரளான பக்தா்கள் பங்கேற்று முறத்தால் அடிவாங்கி சென்றனா். தொடா்ந்து, இரவு மும்மூா்த்தி பிறப்பு, அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. மேலும், மாா்ச் 21-ஆம் தேதி வரை நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
மாா்ச் 22-ஆம் தேதி மஞ்சள்நீா் விளையாட்டுடன் விழா நிறைவடைந்து, கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


