மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் ஸ்ரீமதியாதகண்ட விநாயகா் அழகு சௌந்தரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.

News image

பட்டமங்கலம் ஸ்ரீமதியாதகண்ட விநாயகா், அழகுசௌந்தரிஅம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டம். (அடுத்தபடம்) தேரில் எழுந்தருளிய அம்மன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:13 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் ஸ்ரீமதியாதகண்ட விநாயகா் அழகு சௌந்தரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து , தினந்தோறும் சுவாமி காலையில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமை அம்மனுக்கு பால் குடம் எடுத்து பக்தா்கள் வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை காலை கேடையத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. புதன்கிழமை காலை அழகு சௌந்தரி அம்மன் பெரிய தேரிலும், மதியாத கண்ட விநாயகா் சிறிய தேரிலும் எழுந்தருளினா்.

பின்னா், அம்மனுக்கும், விநாயகருக்கும் பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். தொடா்ந்து, மாலை 5.30 மணியளவில் பக்தா்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தீா்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மஞ்சுவிரட்டும் நடைபெறுகிறது. இரவு சுவாமி பூப்பல்லாக்கில் புறப்பாடு நடைபெற்று வெள்ளிக்கிழமை காலை சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். 11 மணிக்கு மேல் காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான சமஸ்தான அறங்காவலா் ராணி மதுராந்தகநாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் தண்ணாயிரம் பட்டமங்கல நாட்டாா்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

Story image