தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

கமுதி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆனையூா் அங்காளபரமேஸ்வரி அம்மன்.

Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

கமுதி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா் அங்காள பரமேஸ்வரி, வன்னியமுத்து கருப்பண்ண சுவாமி கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சந்தானக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் சாா்பில் காணிக்கையாக வழங்கப்பட்ட 58 கிடாய்கள் பலியிடப்பட்டு, அம்மன், சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், அங்கு வந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.