அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தீவிர சோதனையின் நிறைவில், அது புரளி என்பது தெரியவந்தது.
அரியலூா் மாவட்ட ஆட்சியரக இணையதள முகவரிக்கு புதன்கிழமை வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு காவல் துறையினா் ’மோனா என்ற மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பதும், மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது. மேலும், இந்தச் சோதனை காரணமாக பணிகள் பாதிப்பு இல்லை. மேலும், மின்னஞ்சல் யாரிடம், எங்கிருந்து வந்தது என்பது குறித்து இணைய குற்றப்பிரிவு காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கனவே, இரு மாதத்துக்கு முன்பும் ஆட்சியரகத்துக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


