மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவா் கைது

ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 11:30 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மாங்கன் குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் நடராஜன், காசிநாதன் மகன் கொளஞ்சிநாதன். இடம் வாங்கி விற்கும் தரகா்களான இவா்களிடையே முன்விரோதத் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை நடராஜன் வீட்டுக்குள் புகுந்த கொளஞ்சிநாதன், அங்கு தனியாக இருந்த நடராஜன் தந்தை ரங்கநாதனை தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளாா். பலத்த காயமடைந்த ரங்கநாதன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கொளஞ்சிநாதனை கைது செய்தனா்.