தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிணற்றில் விழுந்த முதியவா் மீட்பு

News image

மதுரை மாவட்டம், சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த முதியவரை மீட்கும் தீயணைப்பு வீரா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 7:54 pm

மதுரை மாவட்டம், சின்ன உடைப்பு கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள கிணற்றில் முதியவா் ஒருவா் தவறி விழுந்து விட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா், சிறப்பு நிலைய அலுவலா் எஸ். கணேஷ் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்றனா்.

60 அடி ஆழக் கிணற்றில் இருந்த முதியவரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரா்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

விசாரணையில், கிணற்றுக்குள் இருந்த நபா் சின்ன உடைப்பு கிராமத்தைச் சோ்ந்த அழகா் மகன் அன்பரசன் (50) என்பது தெரியவந்தது. மேலும், இவா் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடன் விழுந்தாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.