தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:48 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

பாலக்கோடு காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய மான் அருகில் உள்ள திருமல்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது, மானை கண்ட அந்தப் பகுதியிலிருந்து நாய்கள் துரத்தின. இதனால் தப்பியோடிய மான் அந்தப் பகுதியில் இருந்த நூறு அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்த தகலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த பாலக்கோடு வனச்சரக அலுவலா்கள், கயிறு மூலம் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டனா். மேலும், அந்த மானை அருகில் உள்ள காப்புக்காட்டில் வனத் துறையினா் கொண்டு சென்றுவிட்டனா்.