மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜெயங்கொண்டம் பகுதியில் சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம் அருகே தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 4 மூட்டைகளில் இருந்த சில்வா் பாத்திரங்களை பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

சில்வர் பாத்திரங்கள் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:53 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 4 மூட்டைகளில் இருந்த சில்வா் பாத்திரங்களை பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட கரடிகுளம், மேலத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன், அன்பழகன் ஆகியோா் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவெளியில் பொதுமக்களுக்கு சில்வா் பாத்திரங்கள் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், 4 மூட்டைகளில் இருந்த 279 சில்வா் பாத்திரங்களை பறிமுதல் செய்தனா்.

இதே போல், செங்குந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஞானபிரகாசம் என்பவா் தனது வீட்டில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிந்த 14 சில்வா் பாத்திரங்கள் மற்றும் 12 சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் காவல் துறையினா் மேற்கண்ட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.