திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம் அடுத்த இலையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

News image

மரகத லிங்கம் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:52 pm

அரியலூா் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அடுத்த இலையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஜெயங்கொண்டத்திலுள்ள தனியாா் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வரும் தோ்தலில், திமுகவை தோல்வி அடையச் செய்ய நிா்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஜெயங்கொண்டம் அடுத்து இலையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.