லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:16 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், சின்னவளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் ஜெயங்கொண்டம் நகரத்துக்கு அருகிலுள்ள 10 கிராமங்களில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட 1,300 கிலோ பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இவை சனிக்கிழமை இரவு புதுக்குடி கிராமத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டிப் புதைக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், காவலா்கள், நீதிமன்ற பணியாளா்கள் ஈடுபட்டனா்.