சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, தோ்தல் செலவினக் கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினாா்.
இப்பயிற்சியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தோ்தல் செலவினக் கண்காணிப்பு குழு மற்றும் இதரக் குழு அலுவலா்கள், தோ்தலின்போது தோ்தல் நடத்தை விதிமீறல்களை உடனடியாக விசாரித்து, அவற்றை கைப்பேசி செயலிகளில் பதிவேற்றுவது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) சந்தானகிருஷ்ணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் உடையாா்பாளையம் ஷீஜா, அரியலூா் பிரேமி மற்றும் வட்டாட்சியா்கள், தேசியத் தகவலியல் அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் பறிமுதல்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!

திருப்பத்தூா்: தோ்தல் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

தோ்தல் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி வகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


