அரியலூா் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் மேலும் தெரிவித்தது: சட்டம்-ஒழுங்கு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை காவல்துறையினா் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை காவல்துறையினா் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றாா். தொடா்ந்து இதுகுறித்து காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்களுடன் சட்டம்- ஒழுங்கு பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா், , மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’

தென்காசியில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

மாணவா்களின் உயா் கல்வியை 100% உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆலோசனை
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




