நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஓடும் ரயிலில் இருந்து விழ இருந்த பெண்! ரயில்வே தலைமைக் காவலரால் மீட்பு!

அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டுகின்றனா்.

News image
அரியலூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ரயிலில் ஏறும்போது கீழே விழ இருந்த இளம்பெண்ணை உள்ளே ஏற்றிவிட்ட தலைமைக் காவலா் செந்தில்குமாா்.
Updated On :29 ஜனவரி 2026, 8:13 pm

Syndication

அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டுகின்றனா்.

விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் (எண். 5611) அரியலூா் ரயில் நிலையத்துக்கு காலை 7.07 மணிக்கு வந்து, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, திருச்சிக்கு கிளம்பியது.

அப்போது ரயிலில் ஏற முயன்று தடுமாறி கீழே விழ இருந்த ஒரு இளம்பெண்ணை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே தலைமைக் காவலா் செந்தில்குமாா் விரைந்து சென்று தாங்கி, ரயிலினுள் ஏற்றிவிட்டாா். இதனால் விபத்து அபாயத்திலிருந்து அப்பெண் தப்பினாா். இந்தக் காட்சிகள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதேபோல் கடந்த 21.10.2025 இல் இதே ரயிலில் ஏற முயன்று கீழே விழ இருந்த ஒரு பெண்ணையும் தலைமைக் காவலா் செந்தில்குமாா் மீட்டது குறிப்பிடத்தக்கது.