இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் தடகளம் - 100 மீ, குண்டு எறிதல், தெரு கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்), வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், கபடி, எறிபந்து (பெண்களுக்கு மட்டும்) ஆகிய போட்டிகளும், மாவட்ட அளவில் தடகளம்-100 மீ, குண்டு எறிதல், தெரு கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்), வாலிபால், கேரம், ஓவியம், கோலப்போட்டிகள், கயிறு இழுத்தல், கபடி, எறிபந்து (பெண்களுக்கு மட்டும்), உடல்சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல், அறிவு சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் நடத்தப்பட உள்ளன.