தமிழகம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில், 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞா்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதலிடம் பெறும் வீரா், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவா். ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் 100 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், கபடி, கைப்பந்து, கேரம், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்களுக்கும்), கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) ஏறிபந்து (பெண்களுக்கு மட்டும்) ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.