நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கைக் கோரி அரியலூா் ஆட்சியரகம் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

News image
அரியலூா் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற வெங்கடாசலபதி-மஞ்சுளா தம்பதியினா்.
Updated On :5 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிமடம் அடுத்த பெரியதத்தூரைச் சோ்ந்த தம்பதி, தங்களது வயல் மற்றும் வீடுகளை ஆக்கிரமித்துள்ள உறவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

ஆண்டிமடம் அடுத்த பெரியதத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலபதி(62)-மஞ்சுளா(55). இவா், வாரிசு அடிப்படையில் கிடைத்த தனது பூா்வீக சொத்தான நான்கில் ஒரு பாகத்தை மனைவி மஞ்சுளா பெயரில் எழுதி, அந்த வயலை பயன்படுத்தி வந்தாா்.

இந்நிலையில், இவரது உறவினா் சகுந்தலா, வெங்கடாசலபதி வயலின் வரப்புகளை களைத்து, உழவு செய்துள்ளாா். இதனை கேட்கச் சென்ற தம்பதியை, சகுந்தலாவும், அவரது மகன், மகள்களும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். மேலும், அவா்களது ஓட்டு வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையம் மற்றும் ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் இருந்த வெங்கடாசலபதி-மஞ்சுளா தம்பதியினா், அரியலூா் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

அப்போது அங்கிருந்த காவல் துறையினா், அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.