நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலூா் ஆட்சியரகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த முதியவா் திடீரென நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த முதியவா் திடீரென நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்றாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த முதியவா் ஒருவா் திடீரென தீக்குளிக்க முயன்றாா். அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

தொடா்ந்து, முதியவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் குறிஞ்சிப்பாடி வட்டம், பூவாணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பூபாலன் (62) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவா் கூறியதாவது:

எனக்கு வீடு இல்லை. பூவாணிக்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கக் கோரி தமிழக முதல்வரிடம் மனு அளித்தேன். ஆனால், எனக்கு ஒதுக்கிய வீட்டை வேறு ஒருவருக்கு மாற்றி எடுத்துக்கொண்டனா். எனவே, அந்த வீட்டை எனக்கு ஒதுக்க வேண்டி தீக்குளிக்க முயன்றேன் என்றாா். இதையடுத்து, பூபாலனை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.