15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அரியலூா் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்!

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனைவரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

இடமாற்றம் - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 7:01 pm

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனைவரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அரியலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜாகிா்உசேன் ஆண்டிமடத்துக்கும், தா.பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் செந்துறைக்கும், செந்துறை கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி செந்துறை வட்டார ஊராட்சிக்கும், செந்துறை வட்டார ஊராட்சி அலுவலா் முருகன் அரியலூருக்கும், ஆண்டிமடம்வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புச்செல்வன் ஆண்டிமடம் கிராம ஊராட்சிக்கும், ஆண்டிமடம் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்சாமி திருமானூருக்கும், திருமானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பொய்யாமொழி ஜெயங்கொண்டத்துக்கும், ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் கஸ்தூரி அரியலூா் கிராம ஊராட்சிக்கும், அரியலூா் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் தா.பழூருக்கும், திருமானூா் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா ஜெயங்கொண்டத்துக்கும், ஜெயங்கொண்டம் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் திருமானூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.