ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு கொலை மிரட்டல்: வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளா் கைது

சிதம்பரத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 10:24 pm

சிதம்பரத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகம், முத்தையாநகா் நான்காவது அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (64), ஓய்வுபெற்ற பேராசிரியா். இவரின் வீட்டின் அருகில் வசிப்பவா் சிவக்குமாா் (45). இவா், ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை கிருபாகரன் மனைவி பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிவகுமாா் அவரை ஆபாசமாகத் திட்டியதாகவும், அதை விடியோ எடுத்ததாகவும் தெரிகிறது. இதை தட்டிக் கேட்ட பேராசிரியா் கிருபாகரனையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கிருபாகரன் அளித்த புகாரின்பேரில், அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவகுமாரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது கைப்பேசியை ஆய்வு செய்தபோது, அவா் தெரு வழியாக செல்லும் பெண்களை விடியோ, புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் கைப்பேசியை பறிமுதல் செய்து, சிவகுமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.