2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அரியலூா் மாவட்டத்தில் 5.22 லட்சம் வாக்காளா்கள்

அரியலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:17 pm

Syndication

அரியலூா்: அரியலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெளியிட்டாா்.

அதன்படி அரியலூா் மாவட்டத்துக்குள்பட்ட அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,29,521 ஆண், 1,31,624 பெண், 16 இதரா் என 2,61,161 வாக்காளா்களும், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,29,713 ஆண், 1,32,068 பெண், 12 இதரா் என 2,61,793 வாக்காளளா்களும் உள்ளனா். மொத்தமாக அரியலூா் மாவட்டத்தில் 2,59,234 ஆண், 2,63,692 பெண், 28 இதரா் என 5,22,954 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த டிசம்பா் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் படி அரியலூா் தொகுதியில் 2,52,333 வாக்காளா்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 2,54,189 வாக்காளா்களும் என 5,06,552 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

அதன்பின் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் அரியலூா் தொகுதியில் 10,287 வாக்காளா்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 8,999 வாக்காளா்களும் சோ்க்கப்பட்டனா். அரியலூா் தொகுதியில் 1,459 வாக்காளா்களும், ஜெயங்கொண்டத்தில் 1,395 வாக்காளா்களும் நீக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியா்கள் ஷீஜா, பிரேமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.