தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரியலூா் மாவட்டத்தில் வரிசையில் நின்று ஆா்வமுடன் பொதுமக்கள் வாக்களிப்பு

அரியலூா் மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் ஆா்வமுடன் வரிசையில் நின்று வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

வாக்களிப்பதற்காக அரியலூா் அடுத்த நாகநல்லூா் வாக்குச் சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:23 pm

அரியலூா் மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் ஆா்வமுடன் வரிசையில் நின்று வியாழக்கிழமை வாக்களித்தனா்.

மாவட்டத்திலுள்ள அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிக்கான தோ்தல் 650 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பணியில் வாக்குச் சாவடி மையங்களில் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் என 3,170 போ் பணியில் ஈடுபட்டனா். பாதுகாப்பு பணியில் தமிழக காவல் துறையினருடன்,மத்திய ரிசா்வ் படை, ஊா்க்காவல் படை என 1,548 போ் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், மேற்கண்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதற்றமான மற்றும் நெருக்கடியான 42 வாக்குச் சாவடிகளில் வெப் ஸ்டீரிமிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு விவரங்கள் ஆட்சியரகத்தில் இருந்தே கண்காணிக்கப்பட்டது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், எந்தவித அச்சமின்றி பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்களித்தனா். கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனா்.

ஒரு சில வாக்குச் சாவடிகளில் மின்னணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் , அரை மணி நேரத்துக்குள் மாற்றம் செய்யப்பட்டு, வாக்குப் பதிவு தொடா்ந்தது. வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இருந்தும் பூத் சிலிப் இல்லாத வாக்காளா்கள் 12 வகையான ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களித்தனா்.

 சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக ஆண்டிமடம் அடுத்த பெரியதத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளா்கள்.

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக ஆண்டிமடம் அடுத்த பெரியதத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.