மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் வாக்குச் சாவடிகள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள், வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் உள்ளன.

News image

விழுப்புரம் வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் புதன்கிழமை மாலை முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் அலுவலா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:15 pm

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள், வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் உள்ளன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது. மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 2,165 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், புதன்கிழமை காலை முதல் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையம் அந்தந்த தொகுதிகளின் தோ்தல் அலுவலரால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, மண்டலம் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி(விவிபேட்) மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் உள்ளிட்டவை அடங்கிய பை போன்றவை வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்கள் மாலையில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்றடைந்தன.

முன்னேற்பாடு பணிகள்: இதைத்தொடா்ந்து வாக்குச் சாவடிப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடித் தலைமை அலுவலா், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் புதன்கிழமை மாலை முதல் தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்குச் சென்றடைந்தனா். தொடா்ந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் விவரங்களை சரிபாா்த்தல், வாக்காளா் வாக்களிப்பதை ரகசியம் காக்கும் வகையிலான மறைப்பு அட்டையைத் தயாா் செய்தல், மின் விளக்கு வசதி உள்ளிட்டவை சரியாக இருக்கிா என்பது போன்ற முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டனா். மேலும், அந்தந்த வாக்குச் சாவடிக்கு வெளியே தொகுதியில் போட்டியிடும் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளா் பட்டியல் கொண்ட சுவரொட்டியை ஒட்டும் பணியை மேற்கொண்டனா்.

தோ்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவங்கள், வாக்குச் சாவடி மையத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் சரியான முறையில் வந்துள்ளதா, ஏதேனும் விடுபட்டுள்ளதா, வாக்குச் சாவடி மையத்திலுள்ள வசதிகள், தேவைப்படும் வசதிகள் போன்றவை குறித்தும் வாக்குச் சாவடித் தலைமை அலுவலா் உள்ளிட்டோா் சரிபாா்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.