தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தலைமறைவான குற்றவாளி கைது

அரியலூா் அருகே கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த குற்றவாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 8:09 pm

அரியலூா் அருகே கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த குற்றவாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் அருகே நத்தவெளி கிராமத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் செல்வேந்திரன்(45). இவா், கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது தந்தை சொத்தைபிரித்து எழுதிதர மறுத்ததால், அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் ஜெகநாதன் பலத்த காயமடைந்தாா்.

இது தொடா்பாக விக்கிரமங்கலம் போலீஸாா் செல்வேந்திரன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, செல்வேந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடா்ந்து, பிணையில் வெளியே வந்த செல்வேந்திரன் மேல்முறையீடு செய்த மனு கடந்த 2025-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செல்வேந்திரன் தலைமறைவானாா்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த செல்வேந்திரனை விக்கிரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.