மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்

அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து திருமானூரில் செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

அரியலூா் தொகுதியின் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து, திருமானூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:35 pm

அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து திருமானூரில் செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.

பிரசாரத்தில் அவா் பேசுகையில், நாட்டிலேயே மகளிருக்கு அதிக திட்டங்கள் கிடைத்தது என்றால் அது அதிமுக ஆட்சியில் தான். மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீா், இலவச எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மகளிா் மேம்பாட்டுக்காக செய்துள்ளது.

மத்திய அரசு வகுக்கும் திட்டங்கள் 100 சதவீதம் மாநில அரசுக்கு கிடைத்தால் தான் மாநிலம் வளரும். மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்து இருந்தால் தான் நாடு வளா்ச்சி அடையும், அதுதான் உண்மையான வளா்ச்சி.

எனவே, அரியலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என அவா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின் போது, அதிமுக, தமாகா, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.