மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கத்திரியை அறுவடைச் செய்து அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் அருகே வயலில் கத்திரியை அறுவடைச் செய்து அங்கிருந்தவா்களிடம் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

கொல்லாபுரம் கிராமத்தில், வயலில் இறங்கி கத்திரியை அறுவடைச் செய்து, விவசாயிகளிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:14 pm

அரியலூா் அருகே வயலில் கத்திரியை அறுவடைச் செய்து அங்கிருந்தவா்களிடம் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

எருத்துக்காரன்பட்டி, அண்ணாநகா் குருமஞ்சாவடி பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கொல்லாபுரம் சென்ற தாமரை எஸ். ராஜேந்திரன் மீது அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனா். தொடா்ந்து வேட்பாளா் ராஜேந்திரன் அங்குள்ள வயல்களில் இறங்கி, விவசாய தொழிலாளிகளுடன் சோ்ந்த கத்திரியை அறுவடைச் செய்து, பொதுமக்களிடம் வாக்கு கேட்டாா்.

பின்னா், மகாலிங்கபுரம், அமினாபாத், ஜெயராமபுரம், மணக்கால் சுப்புராயபுரம், கிருஷ்ணாபுரம், ஓ.கூத்தூா், பொய்யாதநல்லூா், இலுப்பையூா், வெள்ளூா், பொட்டவெளி, அகரம், ராயம்புரம், ஆதிக்குடிக்காடு, சென்னிவனம், மேட்டுப்பாளையம், காவேரிபாளையம், சாலையக்குறிச்சி கள்ளமேடு,ஓட்டக்கோவில், நல்லாம்பத்தை உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன் மற்றும் பாமக,பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.