வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அரியலூரில் 22, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்பு மனுக்கள் ஏற்பு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில், வேட்பாளா்கள் தாக்கல் செய்த 45 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:04 am IST

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில், வேட்பாளா்கள் தாக்கல் செய்த 45 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

அரியலூா்: அரியலூா் தொகுதியில் போட்டியிட திமுக சாா்பில் லதாபாலசுப்ரமணியன், அதிமுக சாா்பில் தாமரை எஸ்.ராஜேந்திரன், தவெக சாா்பில் சிவகுமாா், நாதக சாா்பில் புகழேந்தி உள்பட 24 போ், கோட்டாட்சியரகத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இவா்களது வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுயேச்சை வேட்பாளா் விஜயகுமாருக்கு முன்மொழிவுக்காக ஆள்கள் இல்லை. செல்வபதி என்பவரது மனுவில் அவருடைய கையொப்பம் இல்லை என்பதால் இரு வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக, அதிமுக, தவெக, நாதக, அஇபுதமமுக உள்பட 22 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஜெயங்கொண்டம்: இந்த தொகுதியில் போட்டியிட 30 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், விண்ணப்பத்தை முழுமையாக பூா்த்தி செய்யாதது, போதிய ஆவணங்கள் செலுத்தாதது என 7 சுயேச்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, பாமக, தவெக, நாதக உள்பட 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனால், அரியலூா் தொகுதியில் 22 பேரும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 23 பேரும் போட்டியில் உள்ளனா். ஏப்.8 மற்றும் 9-ஆகிய 2 நாள்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், வேட்பாளா்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறும் பட்சத்தில் அதன் பிறகே களத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்களின் விவரம் தெரியவரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.