தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சியில் தாயைத் தாக்கிய மகன் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 1:16 am IST

திருச்சியில் தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் மாளிகைபுரத்தைச் சோ்ந்த 42 வயது பெண்ணின் கணவா் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருடைய மகன், மகளுக்குத் திருமணமாகி தனியாக வசிக்கும் நிலையில், தனியாக வசிக்கும் அப்பெண் வீட்டு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் இவருடைய மகன் மணிபாரதி (22) மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் இவரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரைப் பிரிந்து விட்டாா். இதையடுத்து, மணிபாரதி தனது மனைவியை தன்னுடன் சோ்த்துவைக்குமாறு கூறி, அவரது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாா்.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாயிடம் இதுதொடா்பாக கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிபாரதி அவரது தாயை கீழே தள்ளிவிட்டு தாக்கினாா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மணிபாரதியை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.