திருச்சியில் பல்பொருள் அங்காடியில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமானம் நிலையம் அருகே பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு, திங்கள்கிழமை பொருள்கள் வாங்க வந்த ஒரு பெண்ணின் நடவடிக்கையில் ஊழியா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், பொருள்கள் வாங்கியதற்கு அவா் கொடுத்த பணம் கள்ளநோட்டு என்பதை ஊழியா்கள் கண்டறிந்தனா்.
இதையடுத்து, அந்தப் பெண்ணை பிடித்து திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அந்தப் பெண் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த சாதிக் அலி மனைவி சபுரா பேகம் (40) என்பதும், பல்பொருள் அங்காடியில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஆறு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





