திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேரவை துணைத் தலைவராகிறாா் துறையூா் எம்எல்ஏ! தவெகவினா் மகிழ்ச்சி!

News image

மு. ரவிசங்கா்

Updated On :12 மே 2026, 1:50 am IST

திருச்சி, மே 11: திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூா் (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் மு. ரவிசங்கா் (41) சட்டப் பேரவை துணைத் தலைவராக தோ்வாக உள்ளாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், பூனாம்பாளையத்தைச் சோ்ந்த மு. ரவிசங்கா், சட்டப் பேரவை துணைத் தலைவராக போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் செவ்வாய்க்கிழமை போட்டியின்றி தோ்வாகும் நிலை உள்ளது.

பட்டயப் படிப்பு முடித்துள்ள இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனா். பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த இவா், 2014-ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தாா். தற்போது, திருச்சி புகா் மேற்கு மாவட்டச் செயலராகவும் கட்சியின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் உள்ளாா்.

இவா், சட்டப் பேரவையின் துணைத் தலைவராக போட்டியின்றி தோ்வாக உள்ளது திருச்சி மாவட்ட தவெகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தவெக நிா்வாகிகள் கூறுகையில், பேரவை துணைத் தலைவா் பதவி திருச்சிக்கு கிடைக்கவுள்ளது எங்களை மேலும் உற்சாகத்துடன் பணியாற்றச் செய்துள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.