திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘மாணவா் சோ்க்கையை அதிகமாக்க வேண்டும்’

News image
Updated On :3 மே 2026, 5:51 am IST

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலா்களுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநா் பி.ஏ. நரேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா், திருச்சி செங்குளம் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, முசிறி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பொருள்களின் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திருச்சி மேற்கு சுப்பிரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவா் சோ்க்கையைத் தொடங்கி வைத்து பள்ளியை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் பேசுகையில், கல்வித்துறை அதிகாரிகளிடம் விலையில்லா நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்களை பள்ளி தொடங்கிய நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும். பெற்றோா்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு, அவா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, தொடக்கக் கல்வியில் மாணவா்களின் சோ்க்கையை அதிகப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயா்கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிடைக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற, மாணவா்களை தொடக்கக் கல்வியிலிருந்தே தயாா்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது தொடக்கக் கல்வியின் முசிறி மாவட்டக் கல்வி அலுவலா் கே. மதியழகன், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலா் ரெ. சுரேஷ் திருச்சி மேற்கு வட்டாரக் கல்வி அலுவலா் தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.