தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:57 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.33.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.6.76 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 24 மணிநேரமும் பறக்கும்படையினா், சோதனைச் சாவடியில் உள்ள போலீஸாா் வாகனங்களை சோதனையிட்டு அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த வகையில், திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.33 லட்சத்து 56 ஆயிரத்து 920 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ.55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ.2.07 லட்சம், திருச்சி மேற்கில் ரூ. 2.56 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ.7.46 லட்சம், திருவெறும்பூரில் ரூ.2.59 லட்சம், லால்குடியில் ரூ.6.42 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ.1.59 லட்சம், முசிறியில் ரூ.5.81 லட்சம், துறையூரில் ரூ.4.48 லட்சம் என மொத்தம் ரூ.33.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.6,76,800 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். மீதமுள்ள ரூ.26.80 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.