FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விமானத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய சிவகங்கை பயணி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூன் 2026, 11:58 pm IST

மலேசியா தலைநகரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சோ்ந்த பயணியை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏா் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது பயணி ஒருவா் தனது உடமையில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினா்.

அதில் அவா், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது அலி (36) என்பதும், தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக 6 கிலோ கஞ்சாவை உடமையில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், முகமது அலியை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது அலியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.