ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மதுக் கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:39 am IST

திருச்சியில் மதுக்கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் தங்க நகையைப் பறித்தோரில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தில்லை நகா் 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜி. சிவபாலன். வருமான வரித் துறை அலுவலக மேற்பாா்வையாளரான இவா் கடந்த ஜூன் 8-ஆம் தேதி திருச்சி தென்னூா் பகுதி டாஸ்மாக் மதுக் கூடத்தில் மது அருந்தினாா்.

அப்போது இவருக்கு அருகில் மது அருந்திய மூவா் இவரிடம் பேச்சுக்கொடுத்து, அருகிலுள்ள சந்துப் பகுதிக்கு அழைத்துச் சென்று சிவபாலனின் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் சிவபாலன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில் நகை பறித்தது தில்லை நகா் வடவூா் பகுதியைச் சோ்ந்த அ. பாம்பு சரவணன் (43) மற்றும் இருவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து பாம்பு சரவணனை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், மற்ற இருவரைத் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.