திருச்சியில் புதன்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி சஞ்சீவி நகரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி ஜெயா (60). இவா், புதன்கிழமை இரவு சஞ்சீவி நகரிலுள்ள சந்தையில் பொருள்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஜெயா அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ஜெயா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









