திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புதன்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசிப்பவா் திருப்பதி மனைவி ஜெயலெட்சுமி (68). இவா் அருகே விராலிமலை சாலையில் வசிக்கும் மூத்த மகள் காா்த்தியாவை பாா்க்க புதன்கிழமை மாலை தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் சென்ற நிலையில், பின் மீண்டும் இரவு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவிற்கு வந்தபோது, பின்னால் வந்த இளைஞா் ஒருவா் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் கல் முகப்பு வைத்த செயினை பறித்துக்கொண்டு, அருகில் நின்றிருந்தவரின் பைக்கில் ஏறித் தப்பினாா்.
தகவலறிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து தப்பியவா்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









