17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

News image

முதல்வா் விஜய்யை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினா் துரை வைகோ.

Updated On :5 ஜூன் 2026, 6:39 am IST

முதல்வா் ஜோசப் விஜய்யை, மதிமுக முதன்மைச் செயரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ சந்தித்து திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

முதல்வா் ஜோசப் விஜய்யிடம், துரை வைகோ வியாழக்கிழமை அளித்த மனு:

திருச்சியை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அமைத்துத் தரவேண்டும். திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும். 68 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் (சமயபுரம் தில்லைநகா் வயலூா், துவாக்குடி–பஞ்சப்பூா், ஜங்ஷன்–விமான நிலையம்–மாத்தூா்) திருச்சி மாநகரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றை திருச்சியில் அமைப்பதை மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

திருச்சி மணப்பாறை தொழிற்சாலை சிப்காட்டை உலகளாவிய மின்னணு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்க வேண்டும்.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத் திட்டத்துக்காக தேவையான மீதமுள்ள 7.67 ஏக்கா் நிலம், வழிகாட்டி மதிப்பு திருத்தம் நிலுவையில் இருப்பதால், இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.