டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:59 pm

Syndication

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் மு.சிவபாலன் (46). இவருடைய மனைவி ஸ்ரீதேவி (44). இருவரும் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

புதுக்கோட்டை சாலையில் டி-மாா்ட் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதேவியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.