சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் நெல்லை விரைவு ரயிலானது (12632) வரும் 6 ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16752) வரும் 6-ஆம் தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) வரும் 7-ஆம் தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.
சென்னை எழும்பூா் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயிலானது (12661) வரும் 7-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் - புகைப்படங்கள்

ரயில்களின் வழித்தடம் மாற்றம்

உழவன், மங்களூா் விரைவு ரயில்கள் இன்றுமுதல் திண்டிவனத்தில் நின்றுசெல்லும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


