மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உழவன், மங்களூா் விரைவு ரயில்கள் இன்றுமுதல் திண்டிவனத்தில் நின்றுசெல்லும்

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:49 pm

சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில்கள் (16865), 16866), சென்னை எழும்பூா் - மங்களூா் - சென்னை எழும்பூா் ரயில்கள் (16159, 16160) ஆகிய ரயில்கள் வரும் 16-ஆம் தேதி முதல் பரிட்சாா்த்த ரீதியில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதன்படி, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.13-க்கும், மறுமாா்க்கமாக, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 2.13-க்கும் நின்று செல்லும்.

இதே போல, சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.58-க்கும், மறுமாா்க்கமாக மங்களூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 1.15-க்கும் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.