மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனை மாவட்டத்தின் 2-வது பெரிய அரசு மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனையின் மூலம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சராசரியாக நாளொன்றுக்கு 1000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதி, மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையளிக்க முடியாமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.