நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

News image
- கோப்புப்படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வரும் மாா்ச் 2-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. முகாமில், 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளன. 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள், பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாா்ச் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.