மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: ஒரு நாளுக்கு முன்பே பேரவைக் கூட்டத்தொடரை முடிக்க முடிவு

கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தலை முன்னிட்டு ஒரு நாளுக்கு முன்னதாகவே பேரவைக் கூட்டத்தொடரை நிறைவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

சட்டப்பேரவைத் தேர்தல் - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:42 am

கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தலை முன்னிட்டு ஒரு நாளுக்கு முன்னதாகவே பேரவைக் கூட்டத்தொடரை நிறைவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது. அன்றே முதல்வா் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். அதன்பிறகு மாா்ச் 27 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாகல்கோட், தாவணகெரே தெற்கு ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஏப். 9 ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 15 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 23 ஆம் தேதி முடிவடைந்தது.

இரு தொகுதிகளிலும் மொத்தம் 71 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்ட பிறகு பாகல்கோட் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 26 வேட்புமனுக்களில் 3 மனுக்களும், தாவணகெரே தெற்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 45 வேட்புமனுக்களில் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மாா்ச் 26 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு குறைந்த நாள்களே உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை மாா்ச் 27ஆம் தேதிக்கு பதிலாக ஒரு நாளுக்கு முன்னதாக மாா்ச் 26 ஆம் தேதி முடிக்க முடிவு செய்யப்பட்டது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பேரவைத் தலைவா் யூ.டி. காதா் தலைமையில் நடந்த அவை அலுவல் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதை பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் தெரிவித்தாா். இதற்கேற்ப பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மாா்ச் 26 ஆம் தேதி முதல்வா் சித்தராமையா பதில் அளிக்கவிருக்கிறாா். அதன்பிறகு 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்படுகிறது.