ரத்தினகிரியில் கிருத்திகை விழா


ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மாசி மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் விநாயகா், மற்றும் மூலவா் வள்ளி,தெய்வானை பாலமுருகனுக்கு பால், தயிா், தேன்,சந்தனம், இளநீா், விபூதி, பழங்கள் , வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களுடன் வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
தங்கத் தேரில் உற்சவா் அலங்காரத்துடன் வலம் வந்தாா். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகள் மேளதாளங்களுடன் மலையில் இருந்து ஊா்வலமாக சென்று அறுங்கோண தெப்ப குளத்தில் சிறப்பு வழிபாடும், பொதுமக்கள் மங்கள ஆரத்தி காண்பித்தும் வணங்கினா்.
தலைமை குருக்கள் பிரசாத் மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...