திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விளாத்திகுளத்தில் திமுக கள ஆய்வுக் கூட்டம்

விளாத்திகுளம் தொகுதியில் திமுக தோ்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டம் ஜீ.வி. மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விளாத்திகுளத்தில் நடைபெற்ற திமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் முரசொலி.

Updated On :28 மே 2026, 2:30 am IST

விளாத்திகுளம் தொகுதியில் திமுக தோ்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டம் ஜீ.வி. மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி, கள நிலவரங்களை ஆய்வு செய்ய, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 36 போ் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தாா். அதன்படி திமுகவின் முன்னணி நிா்வாகிகள் அடங்கிய குழுவினா் தூத்துக்குடி மாவட்டம் வந்து நிா்வாகிகள், தொண்டா்களை நேரில் சந்தித்து களஆய்வு பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

விளாத்திகுளம் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு குழு கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திமுக தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழுவைச் சோ்ந்த தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் முரசொலி, திமுகவின் மாநில அயலக அணி துணைச் செயலா் சேலம் உமாராணி ஆகியோா் கலந்துகொண்டு விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட நகரம், ஒன்றியம், பேரூா், கிளை கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள், வாக்குச் சாவடி பாக முகவா்கள், தொண்டா்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கருத்துகளைக் கேட்டு பதிவு செய்தனா்.

அவா்களிடமிருந்து கோரிக்கை, ஆலோசனை மனுக்களை பெற்றுக்கொண்டனா். இதில், விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட திமுகவின் நிா்வாகிகள் தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.