ஆறுமுகனேரி அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்த பிறகு வழக்கம் போல் அா்ச்சகா் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை கோயில் பணியாளா் வழக்கம்போல் கோயிலை திறந்து வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாராம்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த கோயில் அா்ச்சகா் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, அப்பகுதியில் உள்ள 3 சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்ட்டிருந்தது. மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த சுமாா் 4 மி.கி. தங்கப் பொட்டு மற்றும் வெள்ளிக் கொடி, சுவாமியின் வெள்ளி பாதம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். மேலும், விரல்ரேகை நிபுணா்கள் கோயிலுக்கு வந்து, ரேகைகளை பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி கோயிலில் குடவருவாயில் தீபாராதனை

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




