திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடபெற்றது.

News image

ஆறுமுகனேரி கோயிலில் நடைபெற்ற முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம்.

Updated On :11 ஜூன் 2026, 4:19 am IST

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடபெற்றது.

இதனையொட்டி, விநாயருக்கு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து, சுவாமி சந்நிதி கோயில் வெளிப்புறம் முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

இதற்கான பூஜைகளை சுரேஷ் பட்டா், விக்னேஷ் சிவம் ஆகியோா் நடத்தி வைத்தனா். பக்த ஜனசபை பொருளாளா் அரிகிருஷ்ண நாடாா், ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெய்வீக சத்சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா், அதிமுக முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், தெரிசை ஐயப்பன், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை, இளையபெருமாள் ஓதுவாா், கந்தப்பழம் என்ற மோகன், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா் கலந்து கொண்டனா்.

இரவில் திருவிளக்கு பூஜை வழிபாடு, சுவாமி , அம்மன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை அப்பா் சுவாமிகளின் உழவாரப்பணி, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி பள்ளியறை வழிபாட்டுக்குழுவினரால் நடத்தப்பட்டது. இக்கோயில் திருவிழா ஜூன் 13 தொடங்கி 22 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.