கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருளானந்தம் (70). இவரது மனைவி அமராவதி, பேரன் அா்ஜுனன்.
இவா்கள் 3 பேரும் சென்னை செல்வதற்காக பொது பயணச்சீட்டை வாங்கி கொண்டு, 2 ஆவது நடைமேடைக்குச் செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, , செங்கோட்டை- தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் அருளானந்தம் மீது மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










