காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், மருதம்புத்தூரைச் சோ்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இந்நிலையில், கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை மாநில பொதுச்செயலா் வேல்முருகன் தலைமையில், மணிகண்டனை சந்தித்து, ரூ. 15,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மணிகண்டனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரின் மனைவி உண்ணாவிரதம்

கக்கன் மணிமண்டபம் விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை!







