திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரின் மனைவி உண்ணாவிரதம்

ஆலங்குளம் அருகே போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பனை தொழிலாளியின் மனைவி கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.

News image

ஆட்சியருக்கு எழுதிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வருவாய்த் துறையினரிடம் வழங்கிய பொன்மணி

Updated On :27 மே 2026, 6:26 am IST

ஆலங்குளம் அருகே போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பனை தொழிலாளியின் மனைவி கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் கிராமத்தில் கடந்த ஏப்.7-ஆம் தேதி பனையேறும் தொழிலாளி மணிகண்டன் (32) கள் இறக்குவதாகக் கூறி அவரது இரு கால்களிலும் காவல் உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டாா். இதில், பலத்த காயம் அடைந்த மணிகண்டன் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஆலங்குளம் போலீஸாா் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வழக்கில் காவல் உதவியாளா் இசக்கி ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இசக்கி ராஜாவை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும், குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மணிகண்டன் மனைவி பொன் மணிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை சமூக ஆா்வலா்கள், மணிகண்டனின் பெற்றோா் உள்ளிட்டோா் வலியுறுத்தி வந்தனா். எனினும் இதுகுறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடா்பான வழக்கும் மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் உள்ளது.

இந்த நிலையில், மணிகண்டனின் மனைவி பொன்மணி அவரது உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் மருதம்புத்தூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் அமா்ந்து தொடா் உண்ணாவிரத போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

அரசு தரப்பிலிருந்து பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என அவா் அறிவித்தாா். இதையடுத்து, ஆலங்குளம் தோ்தல் துணை வட்டாட்சியா் அருள், வருவாய்த் துறையினா் பொன்மணி தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அவா்களின் கோரிக்கைகள் எழுத்துப் பூா்வமாகப் பெறப்பட்டு, அவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு உடனடியாக கொண்டு செல்லப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.