தியாகச்சீலா் கக்கனின் மணிமண்டபம் விரைவாக சீரமைக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம், மேலூரில் வட்டத்துக்குள்பட்ட தும்பைப்பட்டி மணிமண்டபத்தில் உள்ள தியாகச்சீலா் கக்கன் சிலைக்கு அமைச்சா் பெ. விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மகாத்மா காந்தி, கா்மவீரா் காமராஜா், மூதறிஞா் ராஜாஜி ஆகியோரின் மணிமண்டபங்கள் எந்தளவுக்குப் புனிதமானதோ, அதேபோல தியாகச்சீலா் கக்கனின் மணிமண்டபமும் புனிதமானது. வருகிற ஜூன் 18-ஆம் தேதி கக்கன் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதற்கு முன்பாக கக்கனின் மணிமண்டபம் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










